மகான்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பாண்டவர்கள், நவக்கிரக நாயகர்கள் தினமும் அருளும் சுவடிகள் Contact தொடர்பு

Saturday, April 15, 2017

ஓங்காரக்குடில்: முருகப்பெருமான் அருட்திரு வருகை.

தமிழக மக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!!

முருகா முருகா!! வருக! வருக! கலியுக மாற்றம் தருக! தருக!!!

ஹேவிளம்பி வருடம் தகர் திங்கள் (சித்திரை மாதம்) வளர்பிறையில் சஷ்டி திகதி தொழிலாளர் தின நன்னாளில் ஹேவிளம்பி சித்திரை 18ம் தேதி 01.05.2017, திங்கட்கிழமை இரவில் விண்ணில் அற்புதம் ஒன்றை நிகழ்த்துவேன் சுப்பிரமணியர் யானுமே.
விண்ணிலே அன்றைய தின இரவிலே சூரியனின் ஆற்றலில் ஒரு பகுதிபோல மிகுந்த பிரகாசமாய் நடுநிசி முன் ஞானபூமியாம் தென்னகம் மிகுதிபட தென்குமரியிலிருந்து 500கி.மீ வடக்காக மத்திய தமிழகத்தில் வானில் உச்சியில் தென்பகுதியில் இரவு 10 மணி முதல் 12 மணிக்குள் சுமார் 2 1/2 நாழிகை நேரம் (சுமார் 1 மணி நேரம்) முருகப்பெருமான் யானே எமது வெளிப்பாட்டை உலகோர் அறிய பிரகாசமான ஒளிச்சுடர் வடிவினிலே காட்சி தருவேனப்பா. இது எமது வெளிப்பாட்டின் முன்னறிவிப்பு சாட்சியாகும். யாம் வெளிப்படும் நிகழ்வின் அற்புத நிகழ்வாகும்.


முருகப்பெருமான் ஆசி பெற விரும்பும் மக்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, வீட்டு வாசலில் கோலமிட்டு சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் மற்றும் பல தெரிந்த உணவுகளை தயார் செய்து ஏழை எளிய மக்களுக்கு "குகா அர்ப்பணம்" "முருகா அர்ப்பணம்" என்று வருகின்ற மக்களை முருகனாக பாவித்து அன்பு செலுத்தி உணவு கொடுப்பவர்கள் அன்று இரவு முருகப்பெருமானின் ஆசியை பெறலாம்.

முருகப்பெருமானின் அருள் வருகையை முன்னிட்டு 01 - 05 - 2017 திங்கட்கிழமை முருகப்பெருமானின் கல்கி அவதாரம், தவத்திரு திருமுருக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்கள் தலைமையில் முருகப்பெருமானின் ஏழாம்படை வீடூ துறையூர் ஓங்காரக்குடிலில் அன்று காலை முதல் மாலை வரை சிறப்பு அன்னதானம் மற்றும் பல நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
-சுபம்

No comments:

Post a Comment