மகான்கள், சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், பாண்டவர்கள், நவக்கிரக நாயகர்கள் தினமும் அருளும் சுவடிகள் Contact தொடர்பு

Thursday, July 6, 2017

ஜென்மத்தைக் கடைத்தேற்ற...

ஓங்காரக்குடில் Ongarakudil

உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல). ஆகவே, ஞானத்தலைவன், ஞானபண்டிதன் முருகப்பெருமானை உருகித் தியானம் செய்தால், நாம் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக்கொள்ளலாம். எனவே, முருகப்பெருமானைப் பூஜிப்போம்! நலம் பெற்று வாழ்வோம்!!

-அடிகளார் ஆறுமுகஅரங்கர்

Aum Muruga ஓம் மு௫கா

No comments:

Post a Comment